Wednesday 8th of May 2024 05:20:15 PM GMT

LANGUAGE - TAMIL
-
சிறைக் கைதிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை - ஐ.நா!

சிறைக் கைதிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை - ஐ.நா!


சிறைக் கைதிகளை தவறாக நடத்துவது கண்டிக்கத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மண்டேலா விதிகளின்படி கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும் என இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி இன்று தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் அமர்த்தி அனாகரிகமாக நடந்துகொண்டதுடன், தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை இரண்டு அரசியல் கைதிகளது தலைமீது வைத்து அச்சுறுத்தியதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

இந்த சம்பவம் தொடர்பாக ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரச தரப்பிலிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் தரப்பிலிருந்தோ எந்தக் கருத்தக்களும் வெளியிடப்படவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE